தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு தான் 75 கள்ள வாக்குகள் அளித்ததாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகத்திலும் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் என்பவரால் சற்று முன்னர் குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்